சிரிப்பு!

Tuesday, February 10, 2009

என்றும் எதையோ வேண்டும் மனதின்
தன்மை மறந்த தருணமது!
எதிலும் மிருகம் மிஞ்சும் மனிதன்
தன்மை மிளிரும் கருணையது!!
வாழ்வின் நீழம் விரும்பும் வயதில்
சற்றே இறந்திட விரும்புவது,
சிரிப்பின் மழையில் நனையும் பொழுது
உயிரின் உதடுகள் புலம்புவது!!

சோகம் படரா கண்ணீர் தெளித்து
வலியில் இருகும் வயிற்றில் குலுங்கி
வலிமை இழந்து தரையில் புரண்டு
வாழ்வின் விளிம்பில் சிரிக்கும் நொடிகள்,
காலம் கொடுத்த கவலைக் கனவில்
நீரைத் தெளித்து தூக்கம் தகர்த்து
வானை பிடித்து நாளை நோக்கி
வாழ்வை நகர்த்தும் ஏணிப் படிகள்!!

1 comments:

Deepak said...

Achu.. Kalakittel .. Awesome lines..